நகர்வெழுத்து

செம்மொழி இலக்கிய, இலக்கண நூல்களின் ஆய்வகம், உலகப் பேரறிஞர்களின் பாராட்டுக்களைப் பெற்ற நூல்களின் பதிப்பகம்
output:

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

ஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ்நூல்கள் - புதிய வெளியீடு

  எமது பதிப்பகத்தின் மற்றுமொரு புதிய வெளியீடாக ஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ்நூல்கள் என்ற நூல் மலர்ந்துள்ளது. பக்கம்: 176. விலை: ரூ.150. தமிழ்ச்செவ்வியல் நூல்களில் பொதிந்து கிடக்கும் அரிய தகவல்களை புதிய நோக்கில் வெளிப்படுத்தும் நூல். வாங்கிப் பயன்கொள்க. நூலின் முகப்புப் பக்கம் இது.



ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

குறுந்தொகை உரைநெறிகள் - மதிப்புரை

   எமது வெளியீடாகிய குறுந்தொகை உரைநெறிகள் நூல் அறிமுக மதிப்புரை தனித்தமிழ் இயக்கத்தின் திங்களிதழாகிய வெல்லும் தூய தமிழ் இதழில் வெளிவந்துள்ளது. இதழாசிரியர் அவர்களுக்கும், சிறப்பாசிரியர் முனைவர் தமிழமல்லன் அவர்களுக்கும் எம் நன்றி. அறிமுக மதிப்புரை இதோ:


செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள் - மதிப்புரை

      எமது வெளியீடாகிய செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள் நூலின் மதிப்புரை பன்னாட்டுக் காலாண்டு இதழாகிய அரிமா நோக்கு இதழில் வெளிவந்துள்ளது. மதிப்புரை எழுதியோருக்கும் இதழாசிரியர் அவர்களுக்கும், பேராசிரியர் ஜெயதேவன் அவர்களுக்கும் எம் நன்றி. மதிப்புரை இதோ:






புதன், 15 ஜூன், 2011

பேராசிரியர் முல்லை ஆதவன் அவர்களின் மதிப்பீடு



      பேராசிரியர் முல்லை ஆதவன் ஐயா அவர்களுக்கு என்னுடைய நூலாகிய குறுந்தொகை உரைநெறிகள் பற்றிய வலைப்பக்கத்தின் குறிப்பினை அனுப்பியிருந்தேன். அவருடைய மதிப்பீட்டுக் கருத்துரை இது.


       என் மதிப்பிற்குரிய நண்பர் மணி, வணக்கம் . வாழ்த்துக்கள்

      அமெரிக்காவிலிருந்து அண்மையில் திரும்பி வந்தேன். வந்தவுடனே தங்கள் நூல் வெளியீடு பற்றிய தகவல் என்னை வரவேற்றது. மிக மகிழ்ச்சி நண்பரே.

        தங்கள் குறுந்தொகை உரை நெறிகள் நூல் வடிவில் தமிழ் ஆர்வலர் அனைவரும் பயன் பெறும் வகையில் வெளி வந்திருப்பது மிக மகிழ்ச்சி தருகிறது.சங்க இலக்கியத்தில் உள்ளார்ந்த புலமையும் அறிவார்ந்த நேரிய ஆய்வுநோக்கும் செயற்பாடும் கொண்டு இயங்ககிக்கொண்டிருக்கும் உங்கள் மீது எனக்கு மிக நம்பிக்கை உள்ளது. எதிர்காலத்தில் தமிழுக்கு வளம் சேர்க்கும் தரமான ஆய்வாளர்களாக என்னால் அடையாளம் காணப்படும் மிகச்சிலரில் நீங்கள் குறிப்பிடத் தக்கவர். நீங்கள், என் கெழுதகை நண்பர் முனைவர் இ.கி.இராமசாமி அவர்களின் மாணவர் என்பதால் இதில் வியப்பு ஏதும் இல்லை. மிக மகிழ்ச்சியுடன் உங்கள் நூலை வரவேற்கிறேன். தமிழிலக்கிய- குறிப்பாக, சங்க இலக்கிய ஆய்வுக்கு- இந்த நூல் ஒரு மிகச் சிறந்த கொடை. தங்கள் ஆய்வுப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

சனி, 4 ஜூன், 2011

புதிய வெளியீடு - குறுந்தொகை உரைநெறிகள்

           முனைவர் ஆ.மணி எழுதிய குறுந்தொகை உரைநெறிகள் என்னும் நூல் தமிழன்னை ஆய்வகத்தின் புதிய வெளியீடாக மலர்ந்துள்ளது. 1915 ஆம் ஆண்டுமுதல் 2010 ஆம் ஆண்டுவரை குறுந்தொகைக்கு வெளிவந்துள்ள உரைகளின் எண்ணிக்கை 19. இவ்வுரைகள் அனைத்தையும் ஆராய்ந்துள்ள முதல்நூல் இது. தமிழில் இவ்வகையிலான ஆய்வுகள் இதுவரை நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 'தமிழ்மொழி செம்மொழி' எனத் தகுதிச் சான்றுரை வழங்கிய உலகப்பேரறிஞர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களால் " இனி, செய்யப்படும் சங்க இலக்கிய ஆராய்ச்சிகளுக்கெல்லாம் வழிகாட்டியாக அமையும் நூல்"  எனப் பாராட்டப்பட மிகச்சிறந்த நூல். நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்க.


       நூற்குறிப்பு: தெம்மி அளவு. 304 பக்கங்கள். விலை: ரூ. 300.,
ISBN:  978- 81910738- 1 -2.

               

சனி, 8 ஜனவரி, 2011

புதுச்சேரிப் பாரம்பரியச் சமையல்

          தமிழன்னை ஆய்வகத்தின் புதிய வெளியீடாகத் திருமதி லூர்து திருவாஞ்சியம் - லூயி அவர்கள் எழுதிய புதுச்சேரிப் பாரம்பரியச் சமையல் என்ற நூல் வெளிவந்துள்ளது. இந்நூலாசிரியர் புதுச்சேரியின் பழமையான குடும்பங்களில் ஒன்றான டாக்டர் திருவாஞ்சியம் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

          பாரிசு செர்போன் பல்கலைக் கழகத்தில் ஆங்கில முதுகலைப் பட்டமும், புதுவைப் பல்கலைக் கழகத்தில் பிரெஞ்சு மொழியில் முனைவர்ப் பட்டமும் பெற்ற திருமதி லூர்து திருவாஞ்சியம் - லூயி அவர்கள் பிரெஞ்சு மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஆற்றிய பணிகளைப் பாராட்டிப் பிரான்சு அரசு இவருக்குச் செவாலியே பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. இத்தகைய பெருமைக்குரிய இவர்கள் புதுச்சேரியின் மரபாகத் திகழும் சமையல் செமுறைகளைப் பதிவு செய்வதிலும், சமையல் கலையிலும் வல்லவர். அவருடைய ஈடுபாட்டின் பயனாக இந்நூல் வெளிவருகின்றது.


        
நூலின் முன்னட்டை


பின்னட்டை

           தெம்மி அளவில் 232 பக்கங்களைக் கொண்டு நல்லதாளில் அச்சிடப்பெற்றுள்ள இந்நூலின் விலை ரூ.100 மட்டுமே.  ISBN : 978 - 81-910738-2-9. நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்க.